ஒரு நொடி பார்வையில்
என் நெஞ்சின் ஓரத்தில்
இடம் பிடித்தவனே
மீண்டும் அத்தரிசனத்திற்காக
தினம் தினம் காத்திருக்கின்றேனே
புரியலையா உனக்கு
உன்னைக் கண்ட நாள் முதலாய்
உன்னையே யாசிக்கின்றேன்
கவிதையாய் வாசிக்கின்றேன்
காகிதத்தில் உன் பெயரை
எழுதிருந்தால்
கிழித்து இருப்பேன்
குப்பையோடு குப்பையாக
கையில் உன் பெயரை
எழுதிருந்தால்
கழுவி இருப்பேன்
நீரோடு நீராக
பாழாய்ப் போன என்
மனதில் அல்லவா
பச்சை குத்தியுள்ளேன்
உனது பெயரை………
உள்ளம் உருகுதே
உன் பெயரைச் சொல்லி
விழிகள் தேடுதே
உன் வரவை எண்ணி
ஒரு நாள் ஒரு பார்வை
தரிசனம் செய்து விடுக
ஒரு நாளை ஒரு ஜென்மமாய்
வாழ்ந்து விடுவேன்!!!
ஆக்கம்
மேகலா
Sept 01 2008 Monday 9.45pm
Tuesday, September 2, 2008
ஒரு நாளை ஒரு ஜென்மமாய்
Posted by Megala.pK at Tuesday, September 02, 2008 0 comments
Labels: என் கவிதைகள்
Wednesday, July 23, 2008
கட்டாயப்படுத்தலாமா
கட்டாயப்படுத்தலாமா
உன்னை…………………
என்னோடு
நட்புக்கொள்ள……………..
கட்டாயப்படுத்துகிறேனா??
விலகுவது
உனக்கோ எளிதானதாக இருக்கலாம்
எனக்கோ விலங்கிடுவது போல உள்ளதே
உன் நட்பில் சுகம் கண்ட எனக்கு
மனம் அதனையே நாடுகின்றதே
Posted by Megala.pK at Wednesday, July 23, 2008 0 comments
Labels: என் கவிதைகள்
நான் காதல் கொண்டேன்
என் தோழியே
வாய் திறந்து நான் பேசாமலே
என் உள்ளத்தை அறிந்திடுவாய் நீ.......
பின் ஏன் இந்த வீண் விதண்டாவதம்...
உன்னை மகிழ வைக்க
நான் பொய்யுரைக்கத் தயார்
நான் காதல் கொண்டேன்........
காதல் கடிதம் பெற்றதில்லை
நான் காதல் கொண்டேன்
கைக்கோர்த்து கடற்கரையில் நடந்ததில்லை
நான் காதல் கொண்டேன்
தொலைப்பேசியில் மணிக்கணக்கில் பேசியதில்லை
நான் காதல் கொண்டேன்
காதலர் தினத்தைக் கொண்டாடியதில்லை
நான் காதல் கொண்டேன்
கால் வலிய ஒருவருக்காகக் காத்திருந்ததில்லை
நான் காதல் கொண்டேன்
'காதலிக்கின்றேன்' என் நா உச்சரித்ததில்லை
நான் காதல் கொண்டேன்
நான் காதலிக்கப்படுகின்றேன் என உணர்ந்ததில்லை
நான் காதல் கொண்டேன்
ஒருவருக்காக என் மனம் உருகவில்லை
நான் காதல் கொண்டேன்
கண்ணீர் சிந்தியதில்லை ஓர் ஆணுக்காக
நான் காதல் கொண்டேன்
மௌனம் மொழி தெரியாது
நான் காதல் கொண்டேன்
என் மனம் என்னிடம் இருக்கின்றது
நான் காதல் கொண்டேன்
உன் மனம் மகிழ
என் மனம் எங்கே இருக்கின்றது
என நான் பொய்யுரைக்க????
ஆக்கம்
மேகலா
saturday, July 19 2008
6.30PM
Posted by Megala.pK at Wednesday, July 23, 2008 0 comments
Labels: என் கவிதைகள்
Saturday, June 21, 2008
எங்கே சென்றன???
நான் நடக்கும்போது
கைப்பிடித்த கரங்கள்
நான் சாப்பிடும்போது
ஊட்டிவிட்ட விரல்கள்
நான் உறங்கும்போது
தலையனையான மடி
நான் ஓடிவிளையாடும்போது
என்னோடு ஓடிய கால்கள்
நான் காதலிக்கும்போது
மகிழ்ந்த மனத்திரை
நான் அழும்போது
எங்கே சென்றன???
20/06/2008 fri 10.15pm
Posted by Megala.pK at Saturday, June 21, 2008 0 comments
Labels: என் கவிதைகள்
Monday, March 24, 2008
ஒரு நொடிக் கவிதை
*******************************************************
புயல் வீசத்தொடங்கியது என் வாழ்வில்
புயலாய் நீ வந்ததால்
*******************************************************
வெயில் கூட குளிர்ந்ததடா
விழிகள் உன்னைக் கண்டதால்
*******************************************************
மழைச் சாரல் ஜன்னலில் படிய
மழை ஓவியமாய் உன் முகம் தெரிகின்றதே
*******************************************************
மின்னலாய் ஒரு பார்வை பார்த்தான்
மின்னல் போல சென்று விட்டான்
என் இதயத்தைத் தாக்கி விட்டு
*******************************************************
நீ
காற்று
உலவுகின்றாய்
என்னைச் சுற்றி
தொட இயலாது உன்னை
ஆனால் சுவாசிப்பேன் உன்னை
இறுதி மூச்சு வரை
*******************************************************
Posted by Megala.pK at Monday, March 24, 2008 0 comments
Labels: என் கவிதைகள்
Friday, March 21, 2008
பண்டை மாற்றம்
காதல் ஒரு பண்டை மாற்றம்
இதயம் கொடுத்து இதயம் வாங்குவதால்
உன்னிடத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என் இதயம்
ஏற்க மறுக்கிறது உன் மனம்
உன் இதயத்தின் வருகைக்காக
திறந்திரந்தது என் மனம்
ஏங்கிய மனம் ஏமாற்றம் கற்றது
பண்டை மாற்றம் தோல்வியில் முடிந்தது
உன் இதயத்தில் மறுக்கப்பட்டவள் நான்
என் இதயத்தில் நிரந்தரமானவன் நீ
என் உள்ளத்தை விட்டு சென்று விடு – இல்லையேல்
என் உயிரை எடுத்து விடுடா
உயிர் பிரிந்தாலும்
உள்ளம் உன் பெயரைச் சொல்லும்!
அறிவாயா நீ?
ஆக்கம்,
மேகலா
19/3/2008 Wednesday 5.45am
Posted by Megala.pK at Friday, March 21, 2008 0 comments
Labels: என் கவிதைகள்
Friday, March 14, 2008
காத்திருப்பேன் உனக்காக
உறவின்றி கிடந்தேன் உலகுக்குச் சுமையாக
உலகமாய் நீ வந்தாய் உறவாகிப் போனேனடா
உருவமின்றி வாழ்ந்தேன் உயிர் உடலுக்குச் சுமையாக
உயிராய் நீ வந்தாய் உருமாறிப் போனேனடா
ஒரு நாள் உன்னோடு கழித்த வேளையில்
ஒரு ஜென்மம் வாழ்ந்ததாய் தோன்றிதேனடா
ஒரு முறை உன்னைக் கண்ட வேளையில்
ஒரு நொடியில் மீண்டும் பிறந்தேனடா
என் வழியில் நீ வந்த வேளையில்
என்னை நான் மறந்தேனடா
எல்லாமே நீதான் எண்ணிய வேளையில்
எவரும் வேண்டாமென உதறினேனடா
பத்து திங்கள் சுமந்த தாயை மறந்தேன்
பருவக் கோளாறு கண்களை மூடியதால்
படிப்பு ஒரு மூலையில் எறிந்தேன்
பயம் என்னை விட்டு அகன்றியதால்
இதயத் தேவதையாக உன் மனதில்
இறக்கும் வரையில் என எண்ணினேனடா
இளமை இலைகள் உதிரும் வேளையில்
இல்லாமல் போவேன் என நினைக்கலடா
வீசப்பட்டது என் மனம் உன்னிடத்திலிருந்து
வீழ்ந்து போனேன் அந்நொடியிலேயே
வீறு கொண்டெழுந்தது கோபம் என்னிடத்திலிருந்து
வீண் என்பதால் கைவிட்டேன் அப்பொழுதுலேயே
கண்ணீர் என் கண்களில் தஞ்சமடைந்தது
களையிழந்து போனது என் வாழ்வு
கரை தேடினேன் எட்டிய தூரம் வரை
கடலோடு கரைந்து போன என் காதலுடன்
தூக்கி எறியப்பட்ட என் மனம் எனக்கில்லை
துயரம் சூழ்ந்தது என் வாழ்விலேயே
தூக்கம் மாத்திரை நாடினேன் இறப்பதற்கில்லை
துவண்டு விடவில்லை இன்னும் என் வாழ்விலேயே
காதலில் வீழ்ந்தேன் உன்னிடத்தில்
கானலாய் போனாய் என்னிடத்தில்
காலத்தின் பதிலுக்காக
காத்திருப்பேன் உனக்காக
ஆக்கம்,
மேகலா
14/3/2008 FRIDAY 3.48AM
Posted by Megala.pK at Friday, March 14, 2008 0 comments
Labels: என் கவிதைகள்