CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, September 2, 2008

ஒரு நாளை ஒரு ஜென்மமாய்

ஒரு நொடி பார்வையில்
என் நெஞ்சின் ஓரத்தில்
இடம் பிடித்தவனே


மீண்டும் அத்தரிசனத்திற்காக
தினம் தினம் காத்திருக்கின்றேனே
புரியலையா உனக்கு


உன்னைக் கண்ட நாள் முதலாய்
உன்னையே யாசிக்கின்றேன்
கவிதையாய் வாசிக்கின்றேன்


காகிதத்தில் உன் பெயரை
எழுதிருந்தால்
கிழித்து இருப்பேன்
குப்பையோடு குப்பையாக


கையில் உன் பெயரை
எழுதிருந்தால்
கழுவி இருப்பேன்
நீரோடு நீராக


பாழாய்ப் போன என்
மனதில் அல்லவா
பச்சை குத்தியுள்ளேன்
உனது பெயரை………


உள்ளம் உருகுதே
உன் பெயரைச் சொல்லி
விழிகள் தேடுதே
உன் வரவை எண்ணி


ஒரு நாள் ஒரு பார்வை
தரிசனம் செய்து விடுக
ஒரு நாளை ஒரு ஜென்மமாய்
வாழ்ந்து விடுவேன்!!!



ஆக்கம்
மேகலா
Sept 01 2008 Monday 9.45pm