ஒரு நொடி பார்வையில்
என் நெஞ்சின் ஓரத்தில்
இடம் பிடித்தவனே
மீண்டும் அத்தரிசனத்திற்காக
தினம் தினம் காத்திருக்கின்றேனே
புரியலையா உனக்கு
உன்னைக் கண்ட நாள் முதலாய்
உன்னையே யாசிக்கின்றேன்
கவிதையாய் வாசிக்கின்றேன்
காகிதத்தில் உன் பெயரை
எழுதிருந்தால்
கிழித்து இருப்பேன்
குப்பையோடு குப்பையாக
கையில் உன் பெயரை
எழுதிருந்தால்
கழுவி இருப்பேன்
நீரோடு நீராக
பாழாய்ப் போன என்
மனதில் அல்லவா
பச்சை குத்தியுள்ளேன்
உனது பெயரை………
உள்ளம் உருகுதே
உன் பெயரைச் சொல்லி
விழிகள் தேடுதே
உன் வரவை எண்ணி
ஒரு நாள் ஒரு பார்வை
தரிசனம் செய்து விடுக
ஒரு நாளை ஒரு ஜென்மமாய்
வாழ்ந்து விடுவேன்!!!
ஆக்கம்
மேகலா
Sept 01 2008 Monday 9.45pm
Tuesday, September 2, 2008
ஒரு நாளை ஒரு ஜென்மமாய்
Posted by Megala.pK at Tuesday, September 02, 2008 0 comments
Labels: என் கவிதைகள்
Subscribe to:
Posts (Atom)