CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Monday, March 24, 2008

ஒரு நொடிக் கவிதை

*******************************************************

புயல் வீசத்தொடங்கியது என் வாழ்வில்
புயலாய் நீ வந்ததால்

*******************************************************

வெயில் கூட குளிர்ந்ததடா
விழிகள் உன்னைக் கண்டதால்

*******************************************************

மழைச் சாரல் ஜன்னலில் படிய
மழை ஓவியமாய் உன் முகம் தெரிகின்றதே

*******************************************************

மின்னலாய் ஒரு பார்வை பார்த்தான்
மின்னல் போல சென்று விட்டான்
என் இதயத்தைத் தாக்கி விட்டு

*******************************************************

நீ
காற்று
உலவுகின்றாய்
என்னைச் சுற்றி
தொட இயலாது உன்னை
ஆனால் சுவாசிப்பேன் உன்னை
இறுதி மூச்சு வரை

*******************************************************

Friday, March 21, 2008

பண்டை மாற்றம்

காதல் ஒரு பண்டை மாற்றம்
இதயம் கொடுத்து இதயம் வாங்குவதால்

உன்னிடத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என் இதயம்
ஏற்க மறுக்கிறது உன் மனம்

உன் இதயத்தின் வருகைக்காக
திறந்திரந்தது என் மனம்

ஏங்கிய மனம் ஏமாற்றம் கற்றது
பண்டை மாற்றம் தோல்வியில் முடிந்தது

உன் இதயத்தில் மறுக்கப்பட்டவள் நான்
என் இதயத்தில் நிரந்தரமானவன் நீ

என் உள்ளத்தை விட்டு சென்று விடு – இல்லையேல்
என் உயிரை எடுத்து விடுடா

உயிர் பிரிந்தாலும்
உள்ளம் உன் பெயரைச் சொல்லும்!

அறிவாயா நீ?

ஆக்கம்,
மேகலா

19/3/2008 Wednesday 5.45am

Friday, March 14, 2008

காத்திருப்பேன் உனக்காக

உறவின்றி கிடந்தேன் உலகுக்குச் சுமையாக
உலகமாய் நீ வந்தாய் உறவாகிப் போனேனடா
உருவமின்றி வாழ்ந்தேன் உயிர் உடலுக்குச் சுமையாக
உயிராய் நீ வந்தாய் உருமாறிப் போனேனடா

ஒரு நாள் உன்னோடு கழித்த வேளையில்
ஒரு ஜென்மம் வாழ்ந்ததாய் தோன்றிதேனடா
ஒரு முறை உன்னைக் கண்ட வேளையில்
ஒரு நொடியில் மீண்டும் பிறந்தேனடா

என் வழியில் நீ வந்த வேளையில்
என்னை நான் மறந்தேனடா
எல்லாமே நீதான் எண்ணிய வேளையில்
எவரும் வேண்டாமென உதறினேனடா

பத்து திங்கள் சுமந்த தாயை மறந்தேன்
பருவக் கோளாறு கண்களை மூடியதால்
படிப்பு ஒரு மூலையில் எறிந்தேன்
பயம் என்னை விட்டு அகன்றியதால்

இதயத் தேவதையாக உன் மனதில்
இறக்கும் வரையில் என எண்ணினேனடா
இளமை இலைகள் உதிரும் வேளையில்
இல்லாமல் போவேன் என நினைக்கலடா

வீசப்பட்டது என் மனம் உன்னிடத்திலிருந்து
வீழ்ந்து போனேன் அந்நொடியிலேயே
வீறு கொண்டெழுந்தது கோபம் என்னிடத்திலிருந்து
வீண் என்பதால் கைவிட்டேன் அப்பொழுதுலேயே

கண்ணீர் என் கண்களில் தஞ்சமடைந்தது
களையிழந்து போனது என் வாழ்வு
கரை தேடினேன் எட்டிய தூரம் வரை
கடலோடு கரைந்து போன என் காதலுடன்

தூக்கி எறியப்பட்ட என் மனம் எனக்கில்லை
துயரம் சூழ்ந்தது என் வாழ்விலேயே
தூக்கம் மாத்திரை நாடினேன் இறப்பதற்கில்லை
துவண்டு விடவில்லை இன்னும் என் வாழ்விலேயே

காதலில் வீழ்ந்தேன் உன்னிடத்தில்
கானலாய் போனாய் என்னிடத்தில்
காலத்தின் பதிலுக்காக
காத்திருப்பேன் உனக்காக

ஆக்கம்,
மேகலா
14/3/2008 FRIDAY 3.48AM

Sunday, March 9, 2008

உயிரெழுத்து என் தலையெழுத்து

அன்பில் அடிமையானேன்

ஆசையில் ஆட்கொண்டேன்

இன்னல்களில் இருப்பிடமடைந்தேன்

ஈன்றப்பொழுது ஈசனடித்தொழுதேன்


உறவுகளால் உருவமிழந்தேன்

ஊமையாய் ஊன்றி போனேன்

என்னை எளிமைப்படுத்தினேன்

ஏக்கங்கள் ஏமாற்றமடைந்தது


ஐயம் ஐக்கியமானது

ஒப்புக்கு ஒளிந்து வாழ்கிறேன்

ஓரமாக - வாழ்க்கை எனும் என் வட்டத்தில்

ஆக்கம்
மேகலா

Tuesday, March 4, 2008

உண்மையான தோழர்கள்

Friendster-யில் ஒரு சின்ன விளையாட்டு வைச்சேங்க...அதாவது, யார் என்னைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்காங்கனு என்கின்ற போட்டி....மொத்தம் இருபது கேள்விகள்...
ஆனால், என்னைப் பொறுத்த வரை அவர்கள் எடுத்த புள்ளிகள் முக்கியமில்லை. என்னைப் பற்றி அறிந்து கொள்வதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட சிரத்தையே என்னை நெகிழ வைத்துள்ளது.
உங்கள் தோழமைக்கு என் சிரம் தாழ்கிறது.

Sunday, March 2, 2008

என் அறை.....என் உலகமாகிறது

நான்கு சுவரைப் பார்த்து அறையிலேயே கிடப்பது கொடுமையிலும் கொடுமைங்க.. தாங்க முடியிலங்க. என்னதான் செய்வதுன்னு தெரியமாட்டேங்கது....

இருக்கின்ற படமெல்லாம் பார்த்து முடிச்சாச்சு...எத்தனை முறை தான் கேட்டப் பாட்டே திரும்ப திரும்ப கேட்பதுங்க???
என்னடா வாழ்க்கையப்பா இது?????