காதல் ஒரு பண்டை மாற்றம்
இதயம் கொடுத்து இதயம் வாங்குவதால்
உன்னிடத்தில் சமர்ப்பிக்கப்பட்டது என் இதயம்
ஏற்க மறுக்கிறது உன் மனம்
உன் இதயத்தின் வருகைக்காக
திறந்திரந்தது என் மனம்
ஏங்கிய மனம் ஏமாற்றம் கற்றது
பண்டை மாற்றம் தோல்வியில் முடிந்தது
உன் இதயத்தில் மறுக்கப்பட்டவள் நான்
என் இதயத்தில் நிரந்தரமானவன் நீ
என் உள்ளத்தை விட்டு சென்று விடு – இல்லையேல்
என் உயிரை எடுத்து விடுடா
உயிர் பிரிந்தாலும்
உள்ளம் உன் பெயரைச் சொல்லும்!
அறிவாயா நீ?
ஆக்கம்,
மேகலா
19/3/2008 Wednesday 5.45am
Friday, March 21, 2008
பண்டை மாற்றம்
Posted by Megala.pK at Friday, March 21, 2008
Labels: என் கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment