CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Wednesday, July 23, 2008

நான் காதல் கொண்டேன்

என் தோழியே
வாய் திறந்து நான் பேசாமலே
என் உள்ளத்தை அறிந்திடுவாய் நீ.......
பின் ஏன் இந்த வீண் விதண்டாவதம்...


உன்னை மகிழ வைக்க
நான் பொய்யுரைக்கத் தயார்
நான் காதல் கொண்டேன்........


காதல் கடிதம் பெற்றதில்லை
நான் காதல் கொண்டேன்

கைக்கோர்த்து கடற்கரையில் நடந்ததில்லை
நான் காதல் கொண்டேன்

தொலைப்பேசியில் மணிக்கணக்கில் பேசியதில்லை
நான் காதல் கொண்டேன்

காதலர் தினத்தைக் கொண்டாடியதில்லை
நான் காதல் கொண்டேன்

கால் வலிய ஒருவருக்காகக் காத்திருந்ததில்லை
நான் காதல் கொண்டேன்

'காதலிக்கின்றேன்' என் நா உச்சரித்ததில்லை
நான் காதல் கொண்டேன்

நான் காதலிக்கப்படுகின்றேன் என உணர்ந்ததில்லை
நான் காதல் கொண்டேன்

ஒருவருக்காக என் மனம் உருகவில்லை
நான் காதல் கொண்டேன்

கண்ணீர் சிந்தியதில்லை ஓர் ஆணுக்காக
நான் காதல் கொண்டேன்

மௌனம் மொழி தெரியாது
நான் காதல் கொண்டேன்

என் மனம் என்னிடம் இருக்கின்றது
நான் காதல் கொண்டேன்

உன் மனம் மகிழ
என் மனம் எங்கே இருக்கின்றது
என நான் பொய்யுரைக்க????


ஆக்கம்
மேகலா
saturday, July 19 2008
6.30PM

0 comments: