இன்று நானும் என் நண்பர்களும் பல்கலைக்கழகத்திலுள்ள ஒரு சிற்றுண்டிச்சாலையில் உணவருந்தி கொண்டியிருந்தோம். அவ்வேளையில் நடந்த ஒரு சம்பவம் எங்களைச் சிரிக்க வைத்தது.
உணவு. எதற்காக நாம் உணவு உட்கொள்கிறோம்? பசியைப் போக்குவதற்காகத் தானே!! அதில் எதுக்குங்க ஒரு போலித்தனம்........ பக்கத்தில் நண்பர்கள் இருந்திடக் கூடாது.......உடனே ஒரு நாடகத்தை அரங்கேற்றி விடுவார்கள்.....
நாங்கள் அமர்ந்த பக்கத்திலுள்ள மேசையில் ஒரு பெண்கள் கூட்டம். ஒரு மாணவி சாப்பிட்டு இருக்காங்க..மற்ற இரண்டு மாணவிகள் உணவு இருந்தும் சாப்பிடாமல் யாருக்கோ காத்திட்டு இருந்தாங்க. அவங்க சாப்பிட்டாங்களோ இல்லையோ........அந்த கூட்டத்திற்கு பின்னால் வந்த நாங்களே சாப்பிட்டு முடித்திட்டோம்ங்க. ஆனால், சாப்பாடு அவங்களுக்காகக் காத்திட்டு இருந்தது...
பாவம் அந்த சாப்பாடு! பிறகு, அவர்களின் நண்பர் ஒருவர் வந்த பின் சாப்பிட ஆரம்பித்தார்கள். அதிலும் ஒரு கூத்துங்க. உணவை ஒழுங்காகச் சாப்பிட வேண்டியதானே... என்னமோ உயிர் கொண்ட உணவுக்கு உடல் வலிக்கும் என்பது போல் அவ்வளவு ஆர அமர சாப்பிடும் அவர்களின் கை வந்த கலையைப் பார்க்க இரு கண்கள் போதாதுங்க. ஒரு பதம் சோறு சாப்பிட அவர்களுக்குப் பத்து நிமிடம் தேவைங்க. கையில் கரண்டி, கரண்டியில் உணவு, உணவுக்காக அவர்களின் நா காத்தியிருந்து. பத்து நிமிடமாக...........
அது மட்டுமா, யாராவது ஆண்கள் பக்கத்தில் இருந்திடக்கூடாது. உடனே, பல அறிவாளி பெண்கள் செய்யும் ஒரே வேளை......உணவை முழுமையாகச் சாப்பிட்டு முடிக்க மாட்டார்கள். ஒரு கால் வாசி உணவைத்தான் சாப்பிடுவார்கள் இந்த 'அறிவாளி' பெண்கள். முழுமையாகச் சாப்பிட்டு முடித்தால் உலகம் இடிந்து விழுந்திடும்ல! ஓர் ஆண் முன் தங்களது கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்கிறார்களாம். ஆனால் அறையில் தனியாக இவர்கள் சாப்பிடும் காட்சி, கண் கொள்ளா காட்சி. இது ஒரு மடத்தனமான பெண்களின் எண்ணம். உலகம் என்னதான் மாறினாலும் இவர்களைத் திருத்தவே முடியாது!
ஒரு பெண்ணாக இதைக் கூற உண்மையிலேயே நான் வெட்கப்படுகிறேங்க.
பெண்களே, இதைப் படித்தாவது திருந்த பாருங்க.
நாளைய சமுதாயம் நமது கையில்!!!!!
0 comments:
Post a Comment